தமிழ்த்துறை
பெருமைமிகு சுவாமி விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சீர்மிகு தமிழ்த்துறை 2011-12 ஆம் கல்வி ஆண்டில் அனுபவமிக்க பேராசிரியர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது .மாணவர்களுக்கு தமிழ் மொழியின் தொன்மையும் தமிழரின் நாகரிகத்தையும், பண்பாட்டையும், பழக்கவழக்கங்களையும் எடுத்துரைக்கும் வகையிலும் கிராமப்புறத்தில் இருந்து வரும் மாணவர்களுக்கு செந்தமிழைச் சிறப்பிக்கும் வகையிலும் அவர்களிடம் ஆக்கத்தையும் ஊக்கத்தையும் தந்து தன்னம்பிக்கையுடன் செயல்பட வைப்பதிலும் பெருமகிழ்வு அடைகிறோம். இத்துறை முதுகலை மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களைக் கொண்டு சீரும் சிறப்புமாக செயல்பட்டு வருகின்றது. முழு நேரம் மற்றும் பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்கள் அனுபவமிக்க தலைமையிலும் ,தோழமை உணர்வுடனும் மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களின் ஆளுமை திறனையும் தலைமை பண்பையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ் மன்றம், ஆய்வரங்கம், கருத்தரங்கம், முத்தமிழ் மன்றம் போன்ற பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. மாணவர்களைச் செயல்திறன் மிக்கவர்களாக ஆக்குவதையே நோக்கமாகக் கொண்டு ஆர்கலி மொழிபுலம் செயல்பட்டு வருகிறது.
Courses:
Courses Offered | Eligibility for Admission | Duration | Course Intake |
---|---|---|---|
B.A.,Tamil | A Pass in HSC (+2) or Equivalent | 3 years [6 Semesters] |
70 |
M.A.,Tamil | A Graduation in B.A., Tamil | 2 years [4 Semesters] |
40 |
Ph.D., (FT/PT) | A Graduation in M.A., Tamil / M.Phil., Tamil |
|